தொட்டம்பாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறப்பு
பவானிசாகர், ஜூலை.13. பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தில்
ரூ.4.80 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட கிளைநூலக கட்டிட திறப்பு விழா
நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை தாங்கினார்.
தொப்பம்பாளையம் ஊராட்சித்தலைவர் நாகராஜ் வரவேற்றார். மாவட்ட
ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் எம்எல்ஏ சுந்தரம்
ஆகியோர் முன்னிலை வகித்து ரிப்பன் வெட்டி புதுப்பிக்கப்பட்ட நூலக
கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றியக்குழு
தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் வேலுமணி, ஒன்றிய கவுன்சிலர் மேகலா, முன்னாள் ஊராட்சித்தலைவர் சுப்ரமணியம் மற்றும் ஊராட்சி வார்டு
உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வாசகர் வட்ட செயலாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.
ரூ.4.80 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட கிளைநூலக கட்டிட திறப்பு விழா
நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை தாங்கினார்.
தொப்பம்பாளையம் ஊராட்சித்தலைவர் நாகராஜ் வரவேற்றார். மாவட்ட
ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் எம்எல்ஏ சுந்தரம்
ஆகியோர் முன்னிலை வகித்து ரிப்பன் வெட்டி புதுப்பிக்கப்பட்ட நூலக
கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றியக்குழு
தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் வேலுமணி, ஒன்றிய கவுன்சிலர் மேகலா, முன்னாள் ஊராட்சித்தலைவர் சுப்ரமணியம் மற்றும் ஊராட்சி வார்டு
உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வாசகர் வட்ட செயலாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment