சத்தியில் நாளை (04.07.2014)ஸ்ரீ லஷ்மி நாராயணர் கோவில், கோட்டை முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
சத்தியமங்கலம்,ஜூலை 3:
சத்தியமங்கலம் ஸ்ரீ லஷ்மி நாராயணர் கோவில் மற்றும் ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை(04.07.2014) நடைபெற உள்ளது.
சத்தியமங்கலம்
வடக்குப்பேட்டையைச் சேர்ந்த மக்கள் நன்கொடை வசூலித்து 1995ம் ஆண்டு ஸ்ரீ
லஷ்மி நாராயணர் என்ற சிறு கோவிலை கட்டினர்.நாளடையில் கோவிலுக்கு வரும்
பக்தர்கள் கூட்டம் அதிரித்து வந்ததால் தொழிலதிபர் எஸ்.வி.வெங்கிடு
தலைமையில் கோவிலை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இக்கோவிலில்
உள்ள பழைய கட்டடங்கள் மற்றும் கோபுரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு ரூ.30
லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை
2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, பவானி ஆற்றில்
இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். இரவு 7
மணியளவில் முதற்கால ஹோமம் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால பூஜையும் இரவு
மூன்றாம் கால பூஜையும் வெள்ளிக்கிழமை மங்கள இசை, திவ்யபிரபந்தத்துடன்
நான்காம் கால ஹோமமும் நடைபெறும். காலை 7.30 மணிக்கு கலசம் புறப்பாடு, ஸ்ரீ
லஷ்மி நாராயணார், விமானம் மற்றும் பரிவார விமானத்திற்கு ஏககால
கும்பாபிஷேகம் நடைபெறும்.
விழாவுக்கு கர்நாடக ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகாசமஸ்தான
மடம் மகாபீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ நிர்மலானந்த நாத மகா சுவாமிஜீ தலைமை
தாங்குகிறார்.விஜயலட்சுமி அறக்கட்டளைத் தலைவர் ஓ.ஆறுமுகசாமி, பண்ணாரிஅம்மன்
குழுமத்தின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, மஹா அபிஷேகம், அலங்காரம் கோ பூஜை
நிகழ்ச்சியும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.மாலை 5.30 மணிக்கு சுவாமி
திருவீதி உலா நடைபெறும்.
அதேபோல, சத்தி ஸ்ரீ
கோட்டை முனியப்பன் கோவிலிலும் நாளை( 04.07.2014) கும்பாபிஷேக விழா நடைபெற
உள்ளது. இக்கோவிலில் உள்ள ஸ்ரீ கோட்டை விநாயகர்,கோட்டை கன்னிமார்,கோட்டை
கருப்பராயர், கோட்டை ஐய்யனார் மற்றும் கோட்டை நாகராஜர் சுவாமி சன்னதிகள்
அமைத்து கோபுரத்திற்கு வர்ணம் தீட்டி புனரமைப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை 7.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள்
கும்பபாபிஷேகம் நடைபெறும்.
0 comments:
Post a Comment