தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014

தடுப்புசுவரில் பைக் மோதி வாலிபர் பலி
 
சத்தியமங்கலம், ஜூன்.29. திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள பேரநாயக்கன்புதூரை சேர்ந்தவர் கிட்டுசாமி மகன் சக்திவேல் (24). தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவரது நண்பரான சம்பத்குமாரும் பைக்கில் புஞ்சைபுளியம்பட்டி வந்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக புஞ்சைபுளியம்பட்டி & அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை சம்பத்குமார் ஓட்டினார். கோயில்புதூர் அருகே செல்லும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. நேற்று காலை சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பத்குமார் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment