பண்ணாரிமாரியம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.33.46 லட்சம்
சத்தியமங்கலம்,
ஜூன்.29. சத்தியமங்கலத்தை அடுத்த வனப்பகுதியில் உள்ள பண்ணாரிமாரியம்மன்
கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
கோயிலில் மொத்தம் 21 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்து சமய
அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, ஈரோடு உதவி ஆணையர் சபர்மதி
முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இப்பணியில் கோயில்
பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் ஈடுபட்டனர். மொத்தம் 33 இலட்சத்து
46 ஆயிரத்து முந்நூற்று எழுபத்தொன்பது ரூபாயும், 237 கிராம் தங்கமும், 448
கிராம் வெள்ளியும் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment