தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 14, 2014

புன்செய்புளியம்பட்டி ட்ரீ அமைப்பின் சார்பில் 1000 மரக்கன்றுகள் விநியோகம்.  20 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

 
புன்செய்புளியம்பட்டி;ஜூலை;14;

புன்செய்புளியம்பட்டி ட்ரீ சமூக நல அமைப்பின் சார்பில் 1000 மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில், ட்ரீ சமூக நல அமைப்பு  
இயங்கி வருகிறது.இந்த இயக்கத்தின் மூலம்,ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு,பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு,ட்ரீ அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.ஆர்.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் மு.கனகராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

புன்செய் புளியம்பட்டி,ஊத்துக்குளியம்மன் கோவில் பகுதி மற்றும்,அதன் சுற்றுவட்டார பகுதிகளான,நல்லூர்,புங்கம்பள்ளி,அனையப்பாளையம்,தச்சுப்பெருமாள் பாளையம்,அய்யம்பாளையம்,தொட்டிபாளையம்,விண்ணப்பள்ளி,பேரநாயக்கன்புதூர் உள்ளிட்ட, கிராமப்புற பகுதிகளில்,மொத்தம் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.இதில்,புங்கன்,வேம்பு,நாகலிங்கம்,சரக்கொன்றை,சக்கரைப்பழம்,பூவரசன்,பாதாம்,அசோகமரம்,நாவல்,வேங்கை,செண்பகம்,தேக்கு,நெல்லி ஆகிய மர வகைகளின் கன்றுகள் வழங்கப்பட்டன.பின்னர் மரக்கன்றுகள்,அப்பகுதியில் குழி தோண்டி நடப்பட்டன. 

ட்ரீ அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் பேசும்போது;மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத்தயாரிக்கும் திறனைப்பெற்றுள்ளன.நச்சு வாயுவை உட்கொள்வதும்,பிராண வாயுவை வெளியிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.வேலை நேரம் தவிர,நாம் பெரும்பாலான நேரம் வீட்டில் தான் கழிக்கிறோம் வீட்டைச்சுற்றிலும் மரங்கள்,செடி,கொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.ஒரு மரம் தன் வாழ் நாளில் 1000 கிலோ கார்பன் டை ஆக்சைடை கிரகித்து கொள்கிறது. மேலும்,மரங்கள் மண் அரிப்பை தடுக்கின்றன.மரத்தை சுற்றி நீர் சேகரமாவதால்,நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கிறது.உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி,இறந்த பின்பும் மரங்கள் ஏழை மக்களின் வீடுகளில் விறகாக எரிபொருளாக பயன்படுகிறது.ஆகவே,மரம் வளர்ப்போம்.மழை பெறுவோம்.மரக்கன்றுகள் வைத்து,பராமரிக்க விருப்பமுள்ளவர்கள் 9578903141 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில்,சமுக நல ஆர்வலர்கள்,ஒக்கலிகர் மகாஜன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்,மற்றும் இதய வேடர்கள் மன்றம்,நமது கிராமம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment