தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014


சத்தி அருகே பரபரப்பு. மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை.
 
 

 
 
 
சத்தியமங்கலம், ஜூலை.1. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் நரசாபுரத்தில் கணவன் மனைவியை கொன்று விட்டு  தானும் தற்கொலை செய்த கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கெம்பநாயக்கன்பாளையம், நரசாபுரம், டேம் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி(51). ஓரு கை இழந்த மாற்றுத்திறனாளி. எந்த வேலைக்கும் செல்வதில்லை. இவரது மனைவி அம்மாசையம்மாள்(42).  திருமண விஷேசங்களுக்கு சமையல் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளி. இவரது மகன் மாரிமுத்து (22). கரும்பு வெட்டும் கூலிவேலை செய்தவருகிறார். தினமும் மது அருந்தி விட்டு மனைவி அம்மாசையம்மாளுடன் சண்டை பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாரிமுத்து வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.  அன்று நள்ளிரவு ராமசாமி மது அருந்திட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.  அம்மாசையம்மாள் வேலைக்கு சென்று வந்த அசதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். ராமசாமி  விறகு வெட்டும் கோடாரியால் தூங்கிக் கொண்டிருந்த அம்மாசையம்மாள்  தலையை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே ராமசாமி கொலை செய்விட்டு மனைவியை கொலை செய்துவிட்டோமோ என்ற பயத்தில் வீட்டிற்கு வெளியே ஆடு கட்டும் சாலையில் தூக்குப்போட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலை 10 மணியளவில் ராமசாமியின் மகன் மாரிமுத்து  வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாய் அம்மாசையம்மாள் ரத்தவெள்ளத்திலும், தந்தை ராமசாமி தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த நரசாபுரம் கிராம மக்கள் உடனடியாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை மற்றும் தற்கொலை சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். இருவரது உடலையும் பிரேதப்பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கணவனே மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கெம்பநாயக்கன்பாளையம் சுற்று வட்டார கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment