ஜூலை 7இல் சத்தி தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சத்தியமங்கலம்,ஜூன் 29:
சத்தியமங்கலம்
அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை 7ஆம் தேதி நடைபெற
உள்ளது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற
தண்டுமாரியம்மன் கோவில், சுமார் 400 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த
கோவிலாகும். 18 இன மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில் சுமார் ரூ.30 லட்சம்
செலவில் புனரமைப்புகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆலய கோபுரம், அர்த்த
மண்டபம், புதிய சன்னதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக
விழா ஜூலை 3ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 4ம் தேதி
மங்கள இசை, பவானி நதிக்கரையில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி
எடுத்து வருதலும் 5ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தியும் 6ம் தேதி
ஸ்ரீ தண்டுமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தனம்
சாத்துதலும் 7ம் தேதி நான்காம் யாக வேள்ளி, நாடி சந்தானம் நிகழ்ச்சியும்
நடைபெறும். அதனைத் தொடர்ந்து, விமான கோபுரம்,ஸ்ரீ தண்டு மாரியம்மன்
மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை
விழாக்குழுத் தலைவர் எஸ்.கே.ரவீந்திரன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து
வருகின்றனர்.
0 comments:
Post a Comment