கர்நாடகாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயற்சி
சத்தியமங்கலம், ஆகஸ்ட் 1: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே
பசுவனாபுரத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற
இருவரை வனத்துறையினர் பிடித்தனர். கேர்மாளம் வனசோதனைசாவடியில் வனச்சரகர் பெர்னாட் தலைமையில் வனத்துறை பணியாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பசுவனாபுரம் சாலையிலிருந்து கர்நாடகா நோக்கி வந்த ஜீப்பை சோதனையிட்டபோது ஜீப்பில் 300 கிலோ எடை கொண்ட 7 மூட்டை ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஜீப்பில் வந்த இருவரை விசாரித்தபோது பசுவனாபுரத்தை சேர்ந்த உத்திரன்(35), பொன்னுசாமி(38) என்பதும், ரேசன் அரிசியை கர்நாடகாவில் உள்ள பீப்பிபாளையத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. வனச்சரகர் பெர்னாட் பிடிபட்ட இருவரையும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தார். வருவாய்த்துறையினர் இருவர் மீது ஆசனூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பசுவனாபுரத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற
இருவரை வனத்துறையினர் பிடித்தனர். கேர்மாளம் வனசோதனைசாவடியில் வனச்சரகர் பெர்னாட் தலைமையில் வனத்துறை பணியாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பசுவனாபுரம் சாலையிலிருந்து கர்நாடகா நோக்கி வந்த ஜீப்பை சோதனையிட்டபோது ஜீப்பில் 300 கிலோ எடை கொண்ட 7 மூட்டை ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஜீப்பில் வந்த இருவரை விசாரித்தபோது பசுவனாபுரத்தை சேர்ந்த உத்திரன்(35), பொன்னுசாமி(38) என்பதும், ரேசன் அரிசியை கர்நாடகாவில் உள்ள பீப்பிபாளையத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. வனச்சரகர் பெர்னாட் பிடிபட்ட இருவரையும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தார். வருவாய்த்துறையினர் இருவர் மீது ஆசனூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment