தமிழ்நாடு தொறையர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்புவிழா.சிறுமுகையில் நடந்தது.
மேட்டுப்பாளையம்.ஜூன்.30.தமிழ்நாடு தொறையர்
சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்புவிழா.சிறுமுகை
எலகம்பாளையத்தில் நடந்தது .எலகம்பாளையம் ,நால்ரோடு,சேரன் நகர் பகுதி
கிளைகள் சார்பில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் அனுநாகராஜன்
தலைமை தாங்கினார்.மாநில பொதுசெயலாளர் கே.ராஜேந்திரன்,மாநில பொருளாளர்
ஆர்.ராஜேந்திரன் ,கௌரவ ஆலோசகர் ஜி.ஆர்.வெங்கட்ராமன் ,கிளை பொருளார்
ஆர்.முத்துகுமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைத்தலைவர் ஆர்.விஜயகுமார்
வரவேற்று பேசினார்.விழாவில் 10 ஆம் வகுப்பு,மற்றும் பிளஸ் 2 பொது
தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,6 ஆம் வகுப்பு முதல்
பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் சுமார் 115 மாணவ மாணவிகளுக்கும்
பரிசுகள்,சான்றிதழ்,மற்றும் கோப்பை ஆகியவற்றை வழங்கி மாநில தலைவர்
அனுநாகராஜன் சிறப்புரை ஆற்றினார் விழாவில் கோவை,ஈரோடு,திருப்பூர் உட்பட
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் ஏராளமானோர்
கலந்துகொண்டனர்..விழா நிகழ்சிகளை மாநில நிதிக்குழு காப்பாளர்
ஈ.ஆர்.குமாரசாமி தொகுத்து வழங்கினார்.முடிவில் கிளை செயலாளர்
எஸ்.கோகுல்குமார் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment