கீழ்முடுதுறை திம்மராயப்பெருமாள் கோவில் இரண்டாம் ஆண்டு திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
புன்செய் புளியம்பட்டி
புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள கீழ்முடுதுறை திம்மராயப்பெ ருமாள்
கோவில் இரண்டாம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக
நடைபெற்றது.இவ்விழாவில்ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை
தரிசித்தனர்.
ஈரோடு மாவட்டம்,புன்செய் புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறையில்,ஒக்கலி கர் இன பட்டக்காரர் குல மக்களின் குல தெய்வமாக அமைந்துள்ளது,திம்மரா யப்பெருமாள் கோவில்.இக்கோவிலின் கும்பாபிசேக
விழா கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி
நடைபெற்றது,தொடர்ந்து,48 நாட்கள் தினசரி மூன்று கால சிறப்பு பூஜைகள்
செய்யப்பட்டு 48 ஆம் நாள் மண்டலபூஜை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில்,திம்மராயப்பெருமாள் கோவில் கும்பாபிசேக
விழா நடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில்,இரண்டாம் ஆண்டு விழா நடத்த
முடிவு செய்யப்பட்டு,அறங்காவலர் குழுத்தலைவர் எஸ்.வி.கிரி தலைமையில் விழா
துவங்கியது.
விழாவையொட்டி, ஜூலை 7 ஆம் தேதி காலை
திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.தொடர்ந்து, நவகலசஸ்தா பனம், ஹோமத்துடன்,
திவ்யபிரபந்தம், வேதபாராயணம் ஓதப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தி ம்மராயப்
பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி,உற்சவ தெய்வங்களுக்கு அலங்கார திருமஞ்சனம்,
திருவாராதனம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர்,வேதபி ரபந்த சாற்று முறையுடன், தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர்,திம்மராயப்பெருமாள்,ஸ் ரீதேவி, பூதேவி,உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனை பூஜைகள் நடந்தன.
விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களு க்கு அன்னதானம்
(ததியாராதனம்) வழங்கப்பட்டது. மேலும்,விழாவில் ஆதிமாதையனூர் பஜனைக்குழுவினரின்
பஜனைப்பாடல்களுடன், கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,ஆண்கள்,பெண் கள் அனைவரும் கலந்து கொண்டு கோலாட்டம் ஆடினர்.
விழா ஏற்பாடுகளை,அறங்காவலர் குழுவின் என்.தங்கவேல், ஏ.திம்மையன், என். நடராஜ்,ஏ.ரவிச்சந்திரன் மற்றும் ஒக்கலிகர் இன பட்டக்கார குல மக்கள் செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment