பொதுமக்களை அச்சுறுத்தும் மக்னா யானை
***********************************************
***********************************************
சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பண்ணாரி பகுதியில் ஏராளமான யானைகள்
உள்ளன.தீவனம் தேடி அலையும் யானைகள் திம்பம் வனத்தில் இருந்து பண்ணாரி
காட்டுக்கு இடம் பெயருவது வழக்கம்.இந்நிலையில், திம்பம் காட்டுப்பகுதியில்
இருந்து வெளியே வந்த மக்னாயானை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்
நீண்ட நேரம் நின்று கொண்டு காட்டுக்குள் செல்லாமல் அடம்பிடித்தது. இதனால்
அச்சமடைந்த வாகன ஓட்டிகள் யானை காட்டுக்குள் செல்லும் வரை காத்திருந்து
பின்னர் வாகனங்களை இயக்கினர்.
0 comments:
Post a Comment