சத்தியமங்கலம்,நவ 19:
சத்தியமங்கலம் ஸ்ரீ மதேஸ்வரன் மலைக்கோவிலில் கார்த்திகை ஜோதி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலத்தில்
இருந்து நம்பியூர் செல்லும் வழியில் 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள உக்கரம்
ஸ்ரீ மதேஸ்வரன் மலைக்கோவில் கார்த்திகை ஜோதி விழா ஞாயிற்றுக்கிழமை காலை
துவங்கியது. விழாவையொட்டி, கோவிலி்ல் உள்ள மாதேஸ்வரர், ஆஞ்சநேயர், நவகிரக
தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கொடி ஏற்றப்பட்டது. மாலை 6
மணிக்கு சங்ககிரி கரகாட்டகுழுவினர் அக்னி கரகம் எடுத்து மலையை கிரிவலமாக
வந்து கரகாட்டம் ஆடினர். அதைத் தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க பக்தர்கள்
கரவொலியுடன் கருடகம்பத்தில் கார்த்திகை ஜோதியை கோயில் பூசாரி டி.பி.
சுந்தரராஜ் ஏற்றினார். இந்த விஸ்வருப மஹா தீப ஜோதியை பக்தர்கள் தரிசனம்
செய்தனர். இதில் தாசநாயக்கனூர், பீளமேடு, குள்ளம்பாளையம், பாலப்பாளையம்
உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கிராமமக்கள்
கலந்துகொண்டனர்.கவுந்தப்பாடியை
ச் சேர்ந்த பக்தர்கள் மற்றும்
கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில்
அறங்காவல் குழுத் தலைவர் பழனிச்சாமி நாயக்கர் தலைமையில் விழாக்குழுவினர்
செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment