தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, November 20, 2013

சத்தியமங்கலம்  மல்லிகை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள்
**************************************************************************************************************************

சத்தியமங்கலம் நவம்பர் 21 :
சத்தியமங்கலம்  சில நாள்களாக பனிப்பொழிவு நிலவிவருவதால் மல்லிகை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், தாண்டாம்பாளையம், பகுத்தம்பாளையம், இக்கரை தத்தப்பள்ளி, வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், ராஜன் நகர், புதுவடவள்ளி, காராச்சிக்கொரை, தொப்பம்பாளையம், கோடேபாளையம், தொட்டம்பாளையம், எரங்காட்டூர், ஆலாம்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி, முல்லை, ரோஜா, சம்பங்கி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள்  சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள், சத்தியில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.
கோவை, ஈரோடு, சேலம், மைசூர், தும்கூர், சிமோகா, பெங்களுரு, ஹைதராபாத், மும்பை நகரங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானம் மூலமும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது மழை குறைந்து கடுமையாக பனி கொட்டுவதால் மல்லிகை செடியில் அரும்புகள் சிறுத்து மகசூல் குறைந்துவிட்டது. இதனால் பூச்செடிகளை கவாத்து செய்யும் பணியில் (பூச்செடிகளின் முதிர்ந்துபோன மேல்பகுதிகளை வெட்டி எடுத்தல்) விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தொட்டம்பாளையம் விவசாயி காளியப்பன் கூறியது: செடிகளை கவாத்து செய்வதால், பிப்ரவரி மாதத்தில் செடிகள் துளிர்த்து புத்துயிர் பெறும். 3 மாதங்கள் கழித்து பூ விளைச்சல் அதிகரிக்கும். பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. கடந்த மாதம் 20 டன்னாக இருந்த வரத்து தற்போது 5 டன்னாக குறைந்துவிட்டது என்றார்.

0 comments:

Post a Comment