தேசிய ஒருமைப்பட்டு தின உறுதிமொழி
******************************************
சத்தியமங்கலம் நவம்பர் 19:
முன்னால் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆம் தேதி தேசிய ஒருமைப்பட்டு தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்க படுகிறது. இதையொட்டி புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள பேரநாயக்கன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய ஒருமைப்பட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். இந்திரா காந்தி அவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மாணவ மாணவியர்கள் தேசிய ஒருமைப்பட்டு உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் த.சசிகலா, பொ.வடிவேலன் உள்பட 100 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
******************************************
சத்தியமங்கலம் நவம்பர் 19:
முன்னால் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆம் தேதி தேசிய ஒருமைப்பட்டு தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்க படுகிறது. இதையொட்டி புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள பேரநாயக்கன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய ஒருமைப்பட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். இந்திரா காந்தி அவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மாணவ மாணவியர்கள் தேசிய ஒருமைப்பட்டு உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் த.சசிகலா, பொ.வடிவேலன் உள்பட 100 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment