புன்செய் புளியம்பட்டியில் அறுபத்து மூவர் திருவீதி உலா
********************************************************************************
இந்நிகழ்சிகளில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு குமரகுருபர அடிகள், சிவத்திரு ந.இரா.சென்னியப்பனார், சிவத்திரு ப.குமரலிங்கம், சிவத்திரு அ.தியாகராசன், சிவத்திரு ச.த.ஆறுமுகம், திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் வழிபாட்டுகுழு சிறப்பாக செய்து இருந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
********************************************************************************
புன்செய் புளியம்பட்டி நவம்பர் 27:
புன்செய் புளியம்பட்டி உண்ணாமுலையம்மை உடனமர் அண்ணாமலையார் திருகோவிலில் அறுபத்துமூவர் திருவீதி உலா மிக சிறப்பாக நடைபெற்றது. காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் திருகரங்களால் நால்வர் பெருமக்களுக்கு பன்னீர் அபிஷேகம் செய்தனர். மாலை 63 நாயன்மார், தொகையடியார் ஒன்பது பேர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீற்று இருந்த திருத்தேர் வீதிஉலா நடைபெற்றது. ஊர்வலத்தில் மகளிர் அணியினர் சீருடை அணிந்து ஆடியும், பாடியும் வந்தனர். பவானி, திருப்பூர் மற்றும் ராசிபுரம் திருத்தொண்டர்கள் கைலாய வாத்தியங்களை விண்அதிர முழங்கினார்கள்.
புன்செய் புளியம்பட்டி உண்ணாமுலையம்மை உடனமர் அண்ணாமலையார் திருகோவிலில் அறுபத்துமூவர் திருவீதி உலா மிக சிறப்பாக நடைபெற்றது. காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் திருகரங்களால் நால்வர் பெருமக்களுக்கு பன்னீர் அபிஷேகம் செய்தனர். மாலை 63 நாயன்மார், தொகையடியார் ஒன்பது பேர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீற்று இருந்த திருத்தேர் வீதிஉலா நடைபெற்றது. ஊர்வலத்தில் மகளிர் அணியினர் சீருடை அணிந்து ஆடியும், பாடியும் வந்தனர். பவானி, திருப்பூர் மற்றும் ராசிபுரம் திருத்தொண்டர்கள் கைலாய வாத்தியங்களை விண்அதிர முழங்கினார்கள்.
இந்நிகழ்சிகளில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு குமரகுருபர அடிகள், சிவத்திரு ந.இரா.சென்னியப்பனார், சிவத்திரு ப.குமரலிங்கம், சிவத்திரு அ.தியாகராசன், சிவத்திரு ச.த.ஆறுமுகம், திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் வழிபாட்டுகுழு சிறப்பாக செய்து இருந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment