தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 29, 2013

தாளவாடியில் மூடுபனி - கடும் குளிரால் மக்கள் அவதி!
****************************************************************************
சத்தியமங்கலம் நவம்பர் 30:

      சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைபாங்கான பகுதியாகும்.இங்கு ஆண்டு தோறும் சராசரியாக 600 மி.மீட்டர் மலை பெய்கிறது. இதனை நம்பி விவசாயிகள் வேளாண்மை செய்து வருகின்றனர். மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை தொடர்ந்து 4 மாதங்கள் கடுங்குளிர் வாட்டி எடுக்கும். மாலை 5 மணிக்கே லேசான குளிர் எடுக்கும். பின்னர் நேரம் ஆக ஆக மூடுபனி அடர்த்தியாக பொழிய துவங்கி விடுகிறது. இதனால் இரவு முழுவதும் கடும்குளிர் ஏற்பட்டு பொது மக்களை வாட்டுகிறது.
        இந்த மூடுபனி இரவு முழுவதும் தொடர்கிறது. மறுநாள் விடிந்தாலும் காலை 8 மணி வரை அப்படியே உள்ளது. 10 அடி தூரத்தில் எதுவும் தெரிவது இல்லை. மேலும் மாலை 7 மணிக்குள் பொதுமக்கள் வீட்டினுள் சென்று முடங்கி விடுகின்றனர். இரவு முழுவதும் கடுங்குளிரால் பொதுமக்கள் மிகவும் அவதிபடுகின்றனர்.

0 comments:

Post a Comment