தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 22, 2013

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
*********************************************************



சத்தியமங்கலம் நவம்பர் 22
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது பவானி சாகர் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது.
ஊட்டி மலைப்பகுதிகளான குண்டா என்ற பகுதியில் 55 மி.மீட்டர் மழையும், கெத்தைபகுதியில் 72 மி.மீட்டர் மழையும், குன்னூர் 47 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்தமழை நீர்மாயாற்றின் வழியாக பவானிசாகர் அணைக்குவருகிறது. இதனால் அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1627 கனஅடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 2142 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
நேற்று 67.03 ஆக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 67.07 ஆக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் 1800 கனஅடிநீரும், பவானி ஆற்றில் 200 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

0 comments:

Post a Comment