சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா
**************************************************************************************************************
**************************************************************************************************************
சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்ற விழாவில் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் 94 பேருக்கு தமிழக அரசின்
விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் நஞ்சன்
வரவேற்றார். பேருராட்சித்தலைவர் வெங்கடாசலம், துணைத்தலைவர் செல்வம் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,
பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கி பள்ளி
மாணவ மாணவியர் 94 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் பால்வள கூட்டுறவு சங்க தலைவர் ராஜகோபால்,
தொட்டம்பாளையம் சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்
கோபால், பேருராட்சி கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் , பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment