தாளவாடி குமிட்டபுரத்தில் சாணியடி திருவிழா
****************************** *********************
******************************
சத்தியமங்கலம், நவ 6:
ஈரோடு மாவட்டம், தாளவாடி கும்டாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாணியடிக்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள்
முந்தைய பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி
பண்டிகையை அடுத்துவரும் நான்காவது நாள் சாணியடிக்கும் திருவிழா கோலாகலமாக
கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை காலை
சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து
பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து
வைக்கப்பட்டது.தொடர்ந்து, ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமிவை வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலையில்,
அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கிராமமக்கள்
மற்றும் சிறார்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு சென்றனர். அங்கு கொட்டி
வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி
மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வந்த
பெண்கள்,ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.இந்த பாரம்பரிய நிகழ்ச்சிக்கு
பிறகு அனைவரும் குளத்தில் குளித்துவிட்டு வரிசையாக சென்று பீரேஸ்வரரை
வழிபட்டனர்.
0 comments:
Post a Comment