கனரக வாகனங்கள் மலைபாதைகளில் பாதுகாப்பாக செல்ல புதிய கண்டுபிடிப்பு! - தேசிய அறிவியல் விருது வென்ற மாணவிக்கு பாராட்டு!
*******************************************************************************
*******************************************************************************
மத்திய அரசின் மாணவர்களுக்கான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு விருதுகள்
தேசிய தொழில்நுட்ப கழகத்தால் அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி விருது வென்ற
புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ராவுக்கு விடியல்
சமூகநல இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய அறிவியல் விருது:
****************************** *******
மத்திய அரசின் மாணவர்களுக்கான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் விருதுகள் தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 301 மாவட்டங்களில் இருந்து 20836 கண்டுபிடிப்புகள் பல பிரிவுகளாக அவர்கள் படிக்கும் வகுப்புகளை வைத்து சிறந்த கண்டுபிடிப்புகள் வகைபடுதப்பட்டு அதனடிப்படையில் விருதுகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளன. இதில் ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி. மெட்ரிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவி ஆர். பவித்ரா விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். 8 ஆம் வகுப்பு பிரிவில் தமிழகதில் இருந்து மாணவி ஆர்.பவித்ரா மட்டுமே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவம்பர் மாதம் 19 இல் அகமதாபாத் ஐ. ஐ. எம். மையத்தில் நடைபெறும் விழாவில் முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் கையால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மாணவியின் கண்டுபிடிப்பு:
****************************** ********
ஸ்லைடிங் அரெஸ்ட்டர் மெக்கானிசம் என்ற இவரது கருவியானது மலைப்பாதைகளில் கனரக வாகனங்கள் மேல்நோக்கி போகும்போது ஓட்டுனர் ப்ரேகை அழுத்தியும் வண்டி நிற்காமல் அதிக எடையின் காரணமாக வாகனம் பின்னோக்கி நகர்வதை தடுத்து நிறுத்தும் வகையில் ஒருவித ப்ரேகை வடிவமைத்துள்ளார். இவரின் இந்த வடிவமைப்பு தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் ஏற்றுகொள்ளபட்டு அதற்கான காப்புரிமையும் வழங்கப்பட உள்ளது.
தேசிய அறிவியல் விருது வென்ற சாதனை மாணவி ஆர்.பவித்ராவுக்கு விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பரிசு வழங்கி வாழ்த்தினர். அப்போது விடியல் உறுப்பினர்கள் லோகநாதன், வடிவேலன் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் ராதா - ராஜா சுரேந்திரன் , தங்கை இலக்கியா ஆகியோர் உடன் இருந்தனர்.
தேசிய அறிவியல் விருது:
******************************
மத்திய அரசின் மாணவர்களுக்கான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் விருதுகள் தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 301 மாவட்டங்களில் இருந்து 20836 கண்டுபிடிப்புகள் பல பிரிவுகளாக அவர்கள் படிக்கும் வகுப்புகளை வைத்து சிறந்த கண்டுபிடிப்புகள் வகைபடுதப்பட்டு அதனடிப்படையில் விருதுகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளன. இதில் ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி. மெட்ரிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவி ஆர். பவித்ரா விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். 8 ஆம் வகுப்பு பிரிவில் தமிழகதில் இருந்து மாணவி ஆர்.பவித்ரா மட்டுமே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவம்பர் மாதம் 19 இல் அகமதாபாத் ஐ. ஐ. எம். மையத்தில் நடைபெறும் விழாவில் முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் கையால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மாணவியின் கண்டுபிடிப்பு:
******************************
ஸ்லைடிங் அரெஸ்ட்டர் மெக்கானிசம் என்ற இவரது கருவியானது மலைப்பாதைகளில் கனரக வாகனங்கள் மேல்நோக்கி போகும்போது ஓட்டுனர் ப்ரேகை அழுத்தியும் வண்டி நிற்காமல் அதிக எடையின் காரணமாக வாகனம் பின்னோக்கி நகர்வதை தடுத்து நிறுத்தும் வகையில் ஒருவித ப்ரேகை வடிவமைத்துள்ளார். இவரின் இந்த வடிவமைப்பு தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் ஏற்றுகொள்ளபட்டு அதற்கான காப்புரிமையும் வழங்கப்பட உள்ளது.
தேசிய அறிவியல் விருது வென்ற சாதனை மாணவி ஆர்.பவித்ராவுக்கு விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பரிசு வழங்கி வாழ்த்தினர். அப்போது விடியல் உறுப்பினர்கள் லோகநாதன், வடிவேலன் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் ராதா - ராஜா சுரேந்திரன் , தங்கை இலக்கியா ஆகியோர் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment