மின்கட்டண விபரம் எஸ்.எம்.எஸ். மூலம் அறியலாம்: மின்வாரியம் அறிவிப்பு
*********************************************************************************************************
*********************************************************************************************************
ஒரு காலத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால்பொது மக்கள் பல மணி நேரம் மின்வாரியம் முன்பு காத்து கிடக்க வேண்டும்.
ஆனால் இன்றோ நிலை மாறிவிட்டது. மின்கட்டணம் செலுத்த எளிய வழிகள் வந்து விட்டன. வீட்டில் இருந்தவாறே தங்களின் மின்கட்டணத்தை ஆன்லைன் வசதி, தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தபால் அலுவலகம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி போன்ற பல்வேறு வசதிகள் வந்து விட்டன. இதனால் மின்நுகர்வோர்களின் அலைச்சல் மற்றும் நேரம் மிச்சமாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மின்கட்டணத்தை அறிந்து கொள்ளும் எளிய வழியினையும் மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தங்களின் செல்போன் நம்பர்களை பதிவு செய்து கொண்டால் அந்த செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தங்களின் மின் கட்டணத்தை மின்நுகர் வோர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதிகூட தொந்து கொள்ள முடியும். எனவே மின் நுகர்வோர் தங்களின் செல்போன் நம்பர்களை தங்களின் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்து பயனடையுமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
ஆனால் இன்றோ நிலை மாறிவிட்டது. மின்கட்டணம் செலுத்த எளிய வழிகள் வந்து விட்டன. வீட்டில் இருந்தவாறே தங்களின் மின்கட்டணத்தை ஆன்லைன் வசதி, தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தபால் அலுவலகம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி போன்ற பல்வேறு வசதிகள் வந்து விட்டன. இதனால் மின்நுகர்வோர்களின் அலைச்சல் மற்றும் நேரம் மிச்சமாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மின்கட்டணத்தை அறிந்து கொள்ளும் எளிய வழியினையும் மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தங்களின் செல்போன் நம்பர்களை பதிவு செய்து கொண்டால் அந்த செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தங்களின் மின் கட்டணத்தை மின்நுகர் வோர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதிகூட தொந்து கொள்ள முடியும். எனவே மின் நுகர்வோர் தங்களின் செல்போன் நம்பர்களை தங்களின் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்து பயனடையுமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment