புன்செய் புளியம்பட்டியில் சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டம்
****************************** ****************************** ************
புன்செய் புளியம்பட்டி ,நவ 30:
******************************
புன்செய் புளியம்பட்டி ,நவ 30:
புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர
சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கக் கூட்டம்
பு.புளியம்பட்டியில் பி.எஸ்.கே.நிஜாம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் 150 சாலையோர சிறு வியாபாரிகளைக் கொண்டு புதிய சங்கம் அமைக்கப்பட்டது. புதிய தலைவராக பி.என்.ராஜேந்திரன், துணைத் தலைவராக பி.எஸ்.கே.நிஜாம், செயலாளராக சுப்பிரமணி (எ) ரகு, துணைச் செயலாளராக ஈஸ்வரி, பொருளாளராக கணேசமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம், தமிழ்நாடு சாலையோர சிறு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில கன்வீனர்-வழக்கறிஞர் செவ்விளம்பரிதி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், சாலையோர சிறுவியாபாரிகளுக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க வேண்டும். சாலையோர சிறுவியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் 2009-ஆம் ஆண்டு இந்திய அரசு ஒரு கொள்கையை வரையறுத்துள்ளது. அதன்படி நகர வியாபாரக் குழு அமைக்க நடவடிக்கை எடுத்து சாலையோர வியாபாரத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய வியாபாரத்திற்கு எவ்வித இடையூறையும் செய்யக்கூடாது என்ப உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் 150 சாலையோர சிறு வியாபாரிகளைக் கொண்டு புதிய சங்கம் அமைக்கப்பட்டது. புதிய தலைவராக பி.என்.ராஜேந்திரன், துணைத் தலைவராக பி.எஸ்.கே.நிஜாம், செயலாளராக சுப்பிரமணி (எ) ரகு, துணைச் செயலாளராக ஈஸ்வரி, பொருளாளராக கணேசமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம், தமிழ்நாடு சாலையோர சிறு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில கன்வீனர்-வழக்கறிஞர் செவ்விளம்பரிதி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், சாலையோர சிறுவியாபாரிகளுக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க வேண்டும். சாலையோர சிறுவியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் 2009-ஆம் ஆண்டு இந்திய அரசு ஒரு கொள்கையை வரையறுத்துள்ளது. அதன்படி நகர வியாபாரக் குழு அமைக்க நடவடிக்கை எடுத்து சாலையோர வியாபாரத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய வியாபாரத்திற்கு எவ்வித இடையூறையும் செய்யக்கூடாது என்ப உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 comments:
Post a Comment