தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 6, 2014

சத்தியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

 

சத்தியமங்கலம், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிக்குப்பட்ட பகுதியில் 50 கிமீ தூரம் அதிமுகவினர் நடத்திய  மனிதசங்கிலி போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

  
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் பகுதியில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் அதிமுகவினர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். 


இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிக்குப்பட்ட பகுதியில் 50 கிமீ தூரம் வரை அதிமுக சார்பில் மனிதசங்கிலி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.. மாக்கினாம்கோம்பையில் மனித சங்கிலி பேரணியை ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் துவக்கி வைத்தார். இந்த மனித சங்கிலி பேரணியானது அரசூர், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், சத்தியமங்கலம்,செண்பகபுதூர் மற்றும் புங்கம்பள்ளி வழியாக புன்செய் புளியம்பட்டி வரை நீடித்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள்  வழிநெடுகிலும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் அதிமுக ஒன்றிய செயலாளர்(வடக்கு) சி.என்.மாரப்பன்,அரியப்பம்பாளை
யம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.துரைசாமி, பவானிசாகர் அதிமுக ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி, பவானிசாகர் பேரூர் கழக செயலாளர் எம்.செல்வம், கோணமூலை ஊராட்சி அதிமுக செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.                

0 comments:

Post a Comment