சத்தியமங்கலம்
பகுதியில் விடிய,விடிய கொட்டித் தீர்த்தது மழை: வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு; மண்ச்சரிவு
சத்தியமங்கலம்,அக் 28:
சத்தியமங்கலம் பகுதியில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தததால் பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை துண்டிப்பு; மண் சரிவு மற்றும் பயிர்ச்சேதம் என மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் பகுதியில் சில வாரங்களாக கனமழை பெய்து வந்ததால் விளைநிலங்கள், வனங்கள் மற்றும் காடுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து பெய்து வந்த மழையால் சிறிய குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. தற்போது, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை காலை வரை விடிய,விடிய மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் செந்நிறத்தில் ம்ழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஓடைக்குட்டை, சுண்ணாம்புகரடு ஆகிய மலை அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய மழைநீர் சத்தி பெரியகுளத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் 25 அடி நீர்மட்டம் கொண்ட பெரியகுளம் முழுகொளளளவை எட்டியது.பெரியகுளத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக மாறி இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து ஓடியது.அப்போது, பள்ளத்தையொட்டி இருந்த விவசாயி செல்வம் என்பவரின் தோட்டத்தில் இருந்த 2 தென்னை மரங்கள் வேரோாடு சாய்ந்தன. அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.சென்னியப்பன் தோட்டத்து பட்டியில் இருந்த 2 ஆடுகள்,3 கிடா குட்டிகள் மற்றும் 20 கோழிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும், மஞ்சள், வாழை மற்றும் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தன.சத்தி-கொளத்தூர் தரைப்பாலத்தின் தார்சாலை பெயர்ந்து அதன் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் இரு கிராமங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் பெய்த மழையால் சத்தி அத்தானி சாலையில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரதுத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணிநேரத்துக்கு பிறகு வெள்ளநீர் தணிந்ததால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து துவங்கியது.
சத்தி கடம்பூர் சாலையில் மல்லியம்துர்க்கம் என்ற இடத்தில் மழை அருவியில் இருந்து கொட்டிய வெள்ளநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடியது. அப்போது, அங்கு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இரவு முழுவதும் பெய்த மழையால் சத்தி பிரிட்டோ காலனி குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் தூங்காமல் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரிகளில் வெள்ளம் சூழந்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,சத்தி அதிமுக ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வெள்ளச் சேதபகுதிகளை பார்வையிட்டு ஜேசிபி மூலம் வடிகால் ஏற்படுத்தி வெள்ளநீரை அப்புறப்படுத்தினர்.
சத்தியமங்கலம் பகுதியல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அனைத்து கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் பகுதியில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தததால் பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை துண்டிப்பு; மண் சரிவு மற்றும் பயிர்ச்சேதம் என மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் பகுதியில் சில வாரங்களாக கனமழை பெய்து வந்ததால் விளைநிலங்கள், வனங்கள் மற்றும் காடுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து பெய்து வந்த மழையால் சிறிய குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. தற்போது, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை காலை வரை விடிய,விடிய மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் செந்நிறத்தில் ம்ழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஓடைக்குட்டை, சுண்ணாம்புகரடு ஆகிய மலை அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய மழைநீர் சத்தி பெரியகுளத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் 25 அடி நீர்மட்டம் கொண்ட பெரியகுளம் முழுகொளளளவை எட்டியது.பெரியகுளத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக மாறி இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து ஓடியது.அப்போது, பள்ளத்தையொட்டி இருந்த விவசாயி செல்வம் என்பவரின் தோட்டத்தில் இருந்த 2 தென்னை மரங்கள் வேரோாடு சாய்ந்தன. அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.சென்னியப்பன் தோட்டத்து பட்டியில் இருந்த 2 ஆடுகள்,3 கிடா குட்டிகள் மற்றும் 20 கோழிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும், மஞ்சள், வாழை மற்றும் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தன.சத்தி-கொளத்தூர் தரைப்பாலத்தின் தார்சாலை பெயர்ந்து அதன் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் இரு கிராமங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் பெய்த மழையால் சத்தி அத்தானி சாலையில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரதுத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணிநேரத்துக்கு பிறகு வெள்ளநீர் தணிந்ததால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து துவங்கியது.
சத்தி கடம்பூர் சாலையில் மல்லியம்துர்க்கம் என்ற இடத்தில் மழை அருவியில் இருந்து கொட்டிய வெள்ளநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடியது. அப்போது, அங்கு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இரவு முழுவதும் பெய்த மழையால் சத்தி பிரிட்டோ காலனி குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் தூங்காமல் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரிகளில் வெள்ளம் சூழந்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,சத்தி அதிமுக ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வெள்ளச் சேதபகுதிகளை பார்வையிட்டு ஜேசிபி மூலம் வடிகால் ஏற்படுத்தி வெள்ளநீரை அப்புறப்படுத்தினர்.
சத்தியமங்கலம் பகுதியல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அனைத்து கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment