- ரூ 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை
புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 20:
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புன்செய் புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலத்தில் தலா 5 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, ஆண்டுதோறும் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. 3 ஆவது ஆண்டாக அக்டோபர் 8 முதல் 12 வரை நடைபெற்ற புத்தக திருவிழாவில் முன்னணி பதிப்பகங்கள் புத்தக அரங்குகளை அமைத்து இருந்தனர். அனைத்து புத்தகத்துக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க பட்டது. ரூ 100 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கிய மாணவர்களுக்கு நூல் ஆர்வலர் என்ற சான்றிதல் வழங்கப்பட்டது. நாள்தோறும் நடைபெற்ற மாலை நேர கருத்தரங்கில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், முனைவர் இளசை சுந்தரம், பழ.கருப்பையா, கம்பம் பெ.செல்வேந்திரன், ஸ்டாலின் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்று பேசினார். மேலும் இயற்கை உணவு திருவிழா, மேஜிக் ஷோ, கிராமிய கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது.
புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவை 50000 இகும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் பார்வை இட்டுள்ளனர். சுமார் 9 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது.
அதேபோல் சத்தியமங்கலத்தில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்ற புத்தக திருவிழாவை 25000இகும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் பார்வை இட்டுள்ளனர். சுமார் 6 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. புன்செய் புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் புத்தக திருவிழாக்களில் மொத்தம் ரூ 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புன்செய் புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலத்தில் தலா 5 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, ஆண்டுதோறும் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. 3 ஆவது ஆண்டாக அக்டோபர் 8 முதல் 12 வரை நடைபெற்ற புத்தக திருவிழாவில் முன்னணி பதிப்பகங்கள் புத்தக அரங்குகளை அமைத்து இருந்தனர். அனைத்து புத்தகத்துக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க பட்டது. ரூ 100 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கிய மாணவர்களுக்கு நூல் ஆர்வலர் என்ற சான்றிதல் வழங்கப்பட்டது. நாள்தோறும் நடைபெற்ற மாலை நேர கருத்தரங்கில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், முனைவர் இளசை சுந்தரம், பழ.கருப்பையா, கம்பம் பெ.செல்வேந்திரன், ஸ்டாலின் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்று பேசினார். மேலும் இயற்கை உணவு திருவிழா, மேஜிக் ஷோ, கிராமிய கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது.
புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவை 50000 இகும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் பார்வை இட்டுள்ளனர். சுமார் 9 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது.
அதேபோல் சத்தியமங்கலத்தில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்ற புத்தக திருவிழாவை 25000இகும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் பார்வை இட்டுள்ளனர். சுமார் 6 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. புன்செய் புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் புத்தக திருவிழாக்களில் மொத்தம் ரூ 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment