தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 13, 2014

மொழி என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு மனிதனின் அடையாளம்.  - கம்பம் பெ.செல்வேந்திரன் 




புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 13 :

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கம்பம் பெ.செல்வேந்திரன்  கலந்து கொண்டு தமிழுக்கும் அமுதென்று பேர்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். தி.மு,க மாவட்ட இலக்கியஅணி செயலாளர் கோ.வெ.குமணன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க செயலாளர் பி.ஏ.சிதம்பரம், நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கம்பம் பெ.செல்வேந்திரன் அவர்கள் தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் பேசும் போது, புன்செய் புளியம்பட்டிக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாணவ மாணவியர்களிடம் புத்தகம் வாசிக்கும்  பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில்  விடியல் சமூகநல இயக்கம் இந்த புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றனர். ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் புத்தகங்களை வாங்க ஆர்வமுடன் இங்கே வருகை தந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சமுகம் நல்ல விடியலை பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு அவர்கள் விடியல் என்ற பெயரை இயக்கத்துக்கு வைத்து இருக்கிறார்கள். ஒரு நல்ல முயற்சி என்பது பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள். புளியம்பட்டி புத்தக திருவிழா முழு வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகில் தீவிரமாக புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம். படிப்பு என்பது சுவையான விஷயம். புத்தகம் என்பது ஒரு சிலருக்கு தோழன். புத்தகம் என்பது ஒரு சிலருக்கு வழிகாட்டி. புத்தகம் என்பது ஒரு சிலருக்கு சிகிச்சை. ஆனால் ஒரு சிலருக்கு புத்தகம் மட்டும் தான் உலகம். அவர்கள் புறஉலகில் வாழ்வதை விட புத்தக உலகில் வாழ்கிறார்கள். புத்தக வாசிப்பு என்பது ஒரு மனிதனை பண்படுத்துகிறது. பக்குவபடுத்துக்கிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஊடகங்களின் தாக்கம் காரணமாக குறைந்து விடுமோ என்ற அச்சம் எல்லோருக்கும்  இருக்கிறது. ஆனால் இத்தகைய புத்தக திருவிழாக்கள் காரணமாக படிக்கும் ஆர்வம் அவ்வளவு சீக்கிரம் குறிந்து விடும்  என்று தோன்ற வில்லை.

உலகில் பேசபடும் மொழிகள் எல்லாம் எண்ணங்களை வெளிபடுத்தும் கருவியாக தான் உள்ளது. ஆனால் தமிழ்மொழி மட்டும் தான் உயிர் என்று நேசிக்கபடுகிறது. உலகில் மொத்தம் 6800 மொழிகள் பேசப்படுகின்றன. இதுவரையில் 372 மொழிகள் அழிந்து விட்டன. ஆண்டுக்கு 10 மொழிகள் அழிந்து வருகின்றன. இந்த மொழிகளில் 10000 மக்கள் மட்டுமே பேசபடுகின்ற மொழி 50 சதவிகிதம். 1000 மக்கள் மட்டுமே பேசபடுகின்ற மொழி 25 சதவிகிதம். 10 அல்லது 100 பேசுகின்ற மொழி 184 மொழி. மொழி என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு மனிதனின் அடையாளம். இந்த உலகில் அதிகமான இன்னலுக்கு ஆளான இனம் இரண்டு. ஒன்று யூத இனம். மற்றொன்று ஈழ தமிழினம்.

ஒரு மொழி எப்போது சாகிறது தெரியுமா? யாரிடமிருந்து சாகிறது தெரியுமா?  குழந்தைகளிடம் இருந்து. அவர்கள் தாய் மொழியில் பேசி பழகவிட்டால் அந்த மொழி மெல்ல மெல்ல அழிந்து போய் விடும். மொழியை வளர்த்தெடுக்க வேண்டும். நம் தாய்மொழியை மறக்க கூடாது. குறைந்த பட்சம் நம் வீட்டிலாவது தமிழிலேயே பேச வேண்டும்.

ராமாயணம் என்பது 6 கண்டங்களை கொண்டது. 12000 பாடல்கள் உடையது. இதை மூன்றே சொல்லில் சொல்லி விடலாம். ஒரு சொல்! ஒரு வில்! ஒரு இல்! இப்படி மூன்றே சொல்லில் ஒரு இதிகாசத்தையே சொல்லும் வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை வைரமுத்து அவர்கள் ஒரே வார்த்தையில் சொல்லுகிறார். ஒருத்தி சிரிக்க கூடாத இடத்தில் சிரித்து தொலைத்தாள். அது மகாபாரதம். ஒருத்தி சிரிக்க கூடிய இடத்தில் சிரிப்பை தொலைத்தாள். அது ராமாயணம். இத்தகைய சிறப்பு மிக்க தமிழை போற்றி பாதுகாப்பு நம் அனைவரின் கடமை என்றார்.

அதனை தொடர்ந்து பசுமை பேராயம் தலைவர் கௌரவ தலைவர் சுந்தராமன் ஏன் வேண்டும் நஞ்சில்லா விவசாயம் என்ற தலைப்பிலும், நல்லகீரை அமைப்பை சார்ந்த வழக்கறிஞர் சிவா நீங்கள் உண்பது உணவா? நஞ்சா? என்ற தலைப்பிலும் நல்ல சோறு அமைப்பின் ராஜமுருகன் நாம் தொலைத்த சிறு தானியங்களின் மகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இவ்விழாவில் திமுக நகரமன்ற உறுப்பினர்கள், அரிமா ராமசாமி,  பசுமை பேராயம் சுந்தரம், நந்தகுமார், கோவிந்தராஜன், கொங்கு தமிழ் இளைஞர் சங்கம் கார்த்திக், மோகன்ராஜ், ஆசிரியர் தங்கவேல் முருகையன், கே.தருமராசு ஆகியோர் உள்பட பலர் பங்கு கொண்டனர். 

0 comments:

Post a Comment