அவிநாசியில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை
அவிநாசி: அவிநாசியில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நகரிலுள்ள முக்கிய குளங்களான தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர் குளம் ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு அவிநாசியில் தற்போது மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment