தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, October 23, 2014

புன்செய் புளியம்பட்டி காமாட்சியம்மன் கோவிலில் கேதார கௌரி பூஜை

 



 
புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 25:

புன்செய் புளியம்பட்டி சேரன் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சியம்மன் திருகோவிலில் கேதார கௌரி பூஜை நடைபெற்றது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கேதார கௌரி பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 10 ஆம் ஆண்டாக கேதார கௌரி பூஜை இன்று காலை நடைபெற்றது. அருள்மிகு காமாட்சியம்மை உடனமர் ஏகாம்பரநாதருக்கு திருகல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாங்கல்ய பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். ஒருவருக்கொருவர் அட்சதை தூவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பின்னர் மதியம் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500 இக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார் மகளிர் அணியினர் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment