மக்கள் பயன்படுத்தாத மதங்கள் சடங்குகளாகிவிடும் - எழுத்தாளர் ஜெயமோகன்
சமூகத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத மதங்கள் வெறும் சடங்குகளாகிவிடும் என எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார்.
மதுரை அரசரடி இறையியல் கல்லூரியில் பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் சார்பில்
சனிக்கிழமை நடைபெற்ற "பெளத்தத்தின் இன்றைய தேவை' எனும் கலந்துரையாடலில்
பங்கேற்று அவர் பேசியது:
ஆங்கிலேய
ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியிலிருந்த நாட்டு மக்களின் மதம், கலாசாரத்தைத்
தொகுத்துள்ளனர். அதன்படியே பெளத்தம் குறித்த கருத்தும் ஐரோப்பிய
அறிஞர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.
மியான்மார், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெளத்தமிருந்தாலும் அவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளது. புத்தர் மறைவுக்கு பிறகு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகே அவரது போதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய அறிஞர்களான பால்காரஸ், ரைஸ் வில்லியம்ஸ், ஹென்றி ஸ்டீல் ஆகியோர் தொகுத்தவையே தற்போது பெளத்தக் கருத்துகளாக உள்ளன. பெளத்தம் இந்தியாவிலிருந்த இந்து மதத்துக்கு அறைகூவலாக இருந்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. வணிகர்கள் மத்தியிலே பெளத்தம் பரவலாக இருந்துள்ளது. பெளத்தர்களது குகைகளின் அருகே சமணர் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.
ஆசிய நாடுகளில் கடந்த 25 ஆண்டுகளில் பெளத்தம் தாக்கத்தை இழந்துவருவதைக் காண முடிகிறது. அதே சமயம், ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
மக்கள் பயன்படுத்தாத மதங்கள், அதன் கொள்கைகள் மறைந்து வெறும் சடங்குகளாகிவிடும். ஆகவே, மதங்களின் தத்துவங்களை மக்கள் பின்பற்றுவது முக்கியம். அறிவியலுக்கு நெருக்கமான மதமாக பெளத்தம் இருந்தும், மக்களால் எளிதில் ஏற்க முடியாத நிலையில், அதன் செல்வாக்கு சரிந்தது என்றார்.
நிகழ்ச்சியை இயக்க ஒருங்கிணைப்பாளர் முதல்வன் தொடங்கி வகித்தார். நிகழ்ச்சியில், லூர்துநாதன், ஞானஅலாய்சியஸ், யாழன் ஆதி மற்றும் மைத்ரி யாழினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மியான்மார், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெளத்தமிருந்தாலும் அவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளது. புத்தர் மறைவுக்கு பிறகு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகே அவரது போதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய அறிஞர்களான பால்காரஸ், ரைஸ் வில்லியம்ஸ், ஹென்றி ஸ்டீல் ஆகியோர் தொகுத்தவையே தற்போது பெளத்தக் கருத்துகளாக உள்ளன. பெளத்தம் இந்தியாவிலிருந்த இந்து மதத்துக்கு அறைகூவலாக இருந்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. வணிகர்கள் மத்தியிலே பெளத்தம் பரவலாக இருந்துள்ளது. பெளத்தர்களது குகைகளின் அருகே சமணர் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.
ஆசிய நாடுகளில் கடந்த 25 ஆண்டுகளில் பெளத்தம் தாக்கத்தை இழந்துவருவதைக் காண முடிகிறது. அதே சமயம், ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
மக்கள் பயன்படுத்தாத மதங்கள், அதன் கொள்கைகள் மறைந்து வெறும் சடங்குகளாகிவிடும். ஆகவே, மதங்களின் தத்துவங்களை மக்கள் பின்பற்றுவது முக்கியம். அறிவியலுக்கு நெருக்கமான மதமாக பெளத்தம் இருந்தும், மக்களால் எளிதில் ஏற்க முடியாத நிலையில், அதன் செல்வாக்கு சரிந்தது என்றார்.
நிகழ்ச்சியை இயக்க ஒருங்கிணைப்பாளர் முதல்வன் தொடங்கி வகித்தார். நிகழ்ச்சியில், லூர்துநாதன், ஞானஅலாய்சியஸ், யாழன் ஆதி மற்றும் மைத்ரி யாழினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment