சகாயம் குழுவை எதிர்த்து வழக்கு ; தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
சென்னை: கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
தலைமையிலான குழு நியமனத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்த
தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும்
தமிழக அரசின் காலதாமதத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனமும் தெரிவிதனர் .
இதனையடுத்து சகாயம் தலைமையிலான குழுவினர் கிரானைட் ஊழல் தொடர்பான பிரச்னையை
உடனடியாக விசாரிக்க களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோர்ட்
தீர்ப்பை பா.ஜ., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
மதுரை மேலூர் பகுதியைச் சுற்றிலும் அரசுக்கு சொந்தமான கிரானைட் ஏலம் எடுத்தவர்கள் பல கோடிக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மதுரையில் கலெக்டராக இருந்த சகாயம் கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இதனையடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து சென்னை ஐகோர்ட் கடந்த செப்டம்பர் மாதம் 11ம்தேதி சகாயம் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடி ஆனது. இந்நிலையில் சகாயம் நியமனம் தொடர்பாக மறு சீராய்வு செய்ய வேண்டும் என மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் தமிழக அரசை கடுமையாக கண்டித்தனர்.
சகாயம் விசாரிப்பதால் ஏன் நீங்கள் அச்சப்படுகிறீர்கள் ? எங்களின் உத்தரவை இன்னும் அமல் படுத்தாமல் இவ்வளவு நாள் ஏன் காலம் தாழ்த்தினீர்கள் என்றும் கேள்வி கேட்டு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சோமயாஜியை , நீதிபதிகள் அதிர வைத்தனர். இதற்கு அரசு தரப்பில் போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று பல காரணங்கள் சொல்லியும் நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்தததுடன், தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரமும் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் ; மேலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் , அதிகாரி சகாயத்தை துறையில் இருந்து உடனே விடுவிக்க வேண்டும். இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும். இவரது விசாரணைக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் . சகாயம் தலைமையில் 4 நாட்களில குழுவை அமைக்க வேண்டும் என்றும் நீதிதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
மதுரை மேலூர் பகுதியைச் சுற்றிலும் அரசுக்கு சொந்தமான கிரானைட் ஏலம் எடுத்தவர்கள் பல கோடிக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மதுரையில் கலெக்டராக இருந்த சகாயம் கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இதனையடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து சென்னை ஐகோர்ட் கடந்த செப்டம்பர் மாதம் 11ம்தேதி சகாயம் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடி ஆனது. இந்நிலையில் சகாயம் நியமனம் தொடர்பாக மறு சீராய்வு செய்ய வேண்டும் என மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் தமிழக அரசை கடுமையாக கண்டித்தனர்.
சகாயம் விசாரிப்பதால் ஏன் நீங்கள் அச்சப்படுகிறீர்கள் ? எங்களின் உத்தரவை இன்னும் அமல் படுத்தாமல் இவ்வளவு நாள் ஏன் காலம் தாழ்த்தினீர்கள் என்றும் கேள்வி கேட்டு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சோமயாஜியை , நீதிபதிகள் அதிர வைத்தனர். இதற்கு அரசு தரப்பில் போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று பல காரணங்கள் சொல்லியும் நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்தததுடன், தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரமும் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் ; மேலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் , அதிகாரி சகாயத்தை துறையில் இருந்து உடனே விடுவிக்க வேண்டும். இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும். இவரது விசாரணைக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் . சகாயம் தலைமையில் 4 நாட்களில குழுவை அமைக்க வேண்டும் என்றும் நீதிதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment