தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 25, 2014

கனமழையால் நிரம்பிய தாளவாடி வனக்குட்டைகள்




சத்தியமங்கலம்,அக் 27:

தாளவாடி வனத்தில் பெய்து வரும் தொடர்மழையால் வனக்குட்டைகள், தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்ட தலமலை, தாளவாடி, கேர்மாளம், தொட்டபுரம், முதியனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிற்றோடைகளில் வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது. அடர்ந்த காட்டுபகுதியில் ஆங்காங்கே வனத்தில் புதிய அருவிகள், நீரோடைகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக அங்கிருந்து வெளியேரும் வெள்ளநீர் ஓரிடத்தில் சேர்வதால் வனஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.   வனத்தில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. புதுவெள்ளத்தால் அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


வனத்தையொட்டியுள்ள தலமலை,நெய்தாளபுரம், மாவநத்தம், ராமர்அணை, தொட்டபுரம் வனக்குட்டைகளில்  கசிவுநீர்க்குட்டைகளில் நீர் நிரம்பி வழிகின்றன. தாளவாடி-தலமலை வனச்சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.தொட்டபுரம், முதியனூர்,தலமலை, நெய்தாளபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட ராகி, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் பயிர்கள் நீரில் மூழ்கியது.தொடர் மழையால் பயிர்கள் அழுகியதால் மகசூல் பாதிக்கப்பட்டது.

பலத்த மழையால் மலைவாழ்மக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி குழந்தைகள் மழையில் நனைந்துபடி சென்றுவருகின்றன.

வனக்குட்டைகளில் நீர் நிரம்பி வருவதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்துவிடுவது குறைந்துள்ளது. வனக்குட்டைகளில் நீர் நிரம்பியுள்ளதால் யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் அந்தந்த குட்டைகளை பயன்படுத்துவதால் சாலைகளில் அவற்றின் நடமாட்டமும்  குறைந்துள்ளது. வனக்கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment