சத்தியமங்கலம் பகுதியில் 2-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சத்தியமங்கலம், அக் 28: தொடர்ந்து பெய்யும் மழையால் சத்தி பகுதியில் 2-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப்டடது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரும்பள்ளம்
அணை, பெரியகுளம், வனக்குட்டைகள் உள்ளிட்ட தடுப்பணைகள் மழைநீர் நிரம்பி
வழிகின்றன. குளம்,குட்டைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் பள்ளங்கள்
வழியாக வெளியேறி பவானிஆற்றில் கலக்கின்றன.
வனப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஓரிடத்தில் சேர்ந்து காட்டாற்று
வெள்ளமாக மாறி பள்ளங்களில் கரைபுரண்டு ஓடுகின்றன. மழை வெள்ளம் தரைப்பாலத்தை
மூழ்கடித்தப்படி செல்வதால் சத்தி-அத்தானி சாலை, சத்தி-கொமாரபாளையம் சாலை,
தாசப்பகவுண்டர்புதூர்-கொடிவேரி சாலை ஆகிய வழித்தடத்தில் 5 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியில் இருந்து காடகநல்லி, மாக்கம்பாளையம், கேர்மாளம் மற்றும் அத்தானி வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தி வாரச்சந்தை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. 4 மணிநேரத்துக்கு பிறகு வெள்ளநீர் தணிந்தால் சத்தி அத்தானி சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
பெரியகுளம் ஏரி நிரம்பி வழிவதால் அதனையொட்டியுள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட மழைநீர், சம்பங்கி, மல்லி, கரும்பு மற்றும் வாழைகள் நீரிழ் மூழ்கின. வெள்ளத்தில் பெரியகுளம் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 2-ஆவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதியில் ஜேசிபி மூலம் வடிகால் ஏற்படுத்தி வெள்ளநீர் தேங்கி நிற்காதபடி மாற்று வழியில் மழைநீர் வெளியேற்றப்பட்டது.
பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பது முற்றிலுமாக நிறுத்துவைக்கப்பட்ட போதிலும், பல்வேறு பள்ளங்களில் பாய்ந்து ஓடும் வெள்ளநீர் பவானிஆற்றில் கலந்து இரு கரைகளை தொட்டிபடி செல்கிறது.
சத்தி அங்கண்ணகவுண்டர்புதூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தோட்டத்தில் வெள்ளநீர் புகுந்து தேங்கி நின்றதால் மரவள்ளிக்கிழங்கு பயிர் சேதமடைந்தன. தோட்டத்தில் இருந்து பாய்ந்து ஓடிய வெள்ளநீர் காட்டாற்று வெள்ளம் போல காட்சியளித்தது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.13 அடியாகவும், நீர் இருப்பு 16.2 டிஎம்சியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10377 கன அடியாகவும் உள்ளது. பவானிஆறு மற்றும் கால்வாய்க்கு தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
சத்தி கோணமூலை ஊராட்சிக்குபட்ட காலனியில் மழையால் சேதமடைந்த 12 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜேசிபி மூலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் சேதமைடந்த பகுதிகளை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சேதுராஜ், கோணமூலை ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மின்சண்முகம், அதிமுக ஓன்றிய செயலாளர்கள் சி.என்.மாரப்பன்,வி.ஏ.பழனிச்சாமி மற்றும் வி.சி.வரதராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்
சத்தியில் இருந்து காடகநல்லி, மாக்கம்பாளையம், கேர்மாளம் மற்றும் அத்தானி வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தி வாரச்சந்தை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. 4 மணிநேரத்துக்கு பிறகு வெள்ளநீர் தணிந்தால் சத்தி அத்தானி சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
பெரியகுளம் ஏரி நிரம்பி வழிவதால் அதனையொட்டியுள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட மழைநீர், சம்பங்கி, மல்லி, கரும்பு மற்றும் வாழைகள் நீரிழ் மூழ்கின. வெள்ளத்தில் பெரியகுளம் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 2-ஆவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதியில் ஜேசிபி மூலம் வடிகால் ஏற்படுத்தி வெள்ளநீர் தேங்கி நிற்காதபடி மாற்று வழியில் மழைநீர் வெளியேற்றப்பட்டது.
பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பது முற்றிலுமாக நிறுத்துவைக்கப்பட்ட போதிலும், பல்வேறு பள்ளங்களில் பாய்ந்து ஓடும் வெள்ளநீர் பவானிஆற்றில் கலந்து இரு கரைகளை தொட்டிபடி செல்கிறது.
சத்தி அங்கண்ணகவுண்டர்புதூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தோட்டத்தில் வெள்ளநீர் புகுந்து தேங்கி நின்றதால் மரவள்ளிக்கிழங்கு பயிர் சேதமடைந்தன. தோட்டத்தில் இருந்து பாய்ந்து ஓடிய வெள்ளநீர் காட்டாற்று வெள்ளம் போல காட்சியளித்தது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.13 அடியாகவும், நீர் இருப்பு 16.2 டிஎம்சியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10377 கன அடியாகவும் உள்ளது. பவானிஆறு மற்றும் கால்வாய்க்கு தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
சத்தி கோணமூலை ஊராட்சிக்குபட்ட காலனியில் மழையால் சேதமடைந்த 12 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜேசிபி மூலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் சேதமைடந்த பகுதிகளை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சேதுராஜ், கோணமூலை ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மின்சண்முகம், அதிமுக ஓன்றிய செயலாளர்கள் சி.என்.மாரப்பன்,வி.ஏ.பழனிச்சாமி மற்றும் வி.சி.வரதராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்
0 comments:
Post a Comment