தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 6, 2014

கம்பத்ராயன்கிரி ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவில் விழா:
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


 



சத்தியமங்கலம், புளியங்கோம்பை மலை உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பத்ராயன்கிரி நரசிம்ம பெருமாள் கோவிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருக்கொடி ஏற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவளக்குட்டை அடர்ந்த வனத்தில் கம்பத்ராயன் மலை உச்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவில். இக் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3-ஆவது சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பகல் என இரு நாள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்வதற்கென்று தனிப்பாதை எதுவும் கிடையாது.  கரடு முரடான செங்குத்தான யானை வழித்தடத்தில் தான் செல்லவேண்டும். சத்தியமங்கலத்தில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ள இக்கோவிலை சென்றடைய வேண்டுமெனில் முதல்அடிவாரம், கம்பத்ராயன்அடிவாரம், சின்னகணுக்கு மடுவு, பெரியகணுக்குமடுவு, மாமடுவு, மட்டுக்காடு போன்ற  6 செங்குத்தான மலைக்குன்றுகளை கடந்துசென்றால் தான் 7வது கம்பத்ராயன்கிரி மலைக்குன்றில் அமைந்துள்ள கோவிலை சென்றடைய முடியும்.

சத்தி,அன்னூர்,கோபி, மைசூர், சாம்ராஜ்நகர்,புன்செய் புளியம்பட்டி,கே.எம்.பாளையம்,
அத்திப்பண்ணகவுணடர் புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காலணி அணியாமல் ஊன்றுகோல் உதவியுடன் 7 மலைக்குன்றுகளை கடந்து கோவில் விழாவில் கலந்துகொண்டனர். சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பரம்பரை கோவில் அர்ச்சகர் ராஜகோபால்,ஸ்ரீ நரசிம்ம பெருமாளுக்கு சிறப்புபூஜைகள் செய்து விழாவை துவக்கி வைத்தார். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வில்,அம்பு, ராமர்பாதம் ஆகியவற்றை வைத்து வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, திருக்கொடி விழாவிற்காக  பெரிய வெங்கலப் பாத்திரத்தில் நெய்,எண்ணெண் ஊற்றியும், அதில் கற்பூரத்தை போட்டும் எட்டு முழ வேஷ்டியை திரியாக மாற்றி தீபம் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து, கோவில் திருப்பணிக் கமிட்டியைச் சேர்ந்த கொண்ணடப்பநாயக்கன்பாளையம் கிராமமக்கள் 100க்கும் மேற்பட்ட கோவிந்தா என்ற கோஷத்துடன் கருடகம்பத்தை மூன்றுமுறை வலம் வந்து இரவு 8 மணிக்கு 20 அடி கருடகம்பத்தின் உச்சியில் தீபம் ஏற்றினர்.இந்த தீபஒளி 35 கிமீ தூரத்தில் உள்ள புன்செய்புளியம்பட்டி மொண்டி பெருமாள் கோவில் வரை தெரிந்தது. மலைகளுக்கு நடுவை தெரிந்த தீபஒளியை  கொண்ணடப்பநாயக்கன்பாளையம், அத்திபண்ணகவுண்டர்புதூர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீட்டில் இருந்தபடி பார்த்துவிட்டு  தங்களது நோன்பு விரத்ததை முடித்துக்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  நரசிம்ம பெருமாளுக்கு அலங்கார பூஜையும், ராம்ர்பாதத்திற்கு தீபாராதனையும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தப்பாறையில் தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தகர்கள் கலந்துகொண்டனர். அப்போது,தீர்த்தப்பாறைக்கு அடியில் வைக்கப்பட்ட குவளையில் நீர்நிரம்பும் அளவை பொருத்து மழை பெய்யும், மக்கள் வளம் பெருவார்கள் என்பது ஐதீகம்.விழாவையொட்டி, தொட்டிமடுவு கிராமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment