தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, October 29, 2014

மழையால் வீடுகள் சேதம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நிவாரணம் வழங்கல்


சத்தியமங்கலம்,அக் 29:
சத்தியமங்கலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வெள்ள நிவாரண உதவிகளை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வழங்கினார்.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் கன மழை பெய்துள்ளதால் பல்வேறு இடங்களில் மண் வீடுகள்,குடிசைகள் இடிந்து விழந்தன.குள்ளங்கரடு, சிக்கரசம்பாளையம், பவானிசாகர் அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.கோணமூலை ஊராட்சிக்குட்பட்ட நஞ்சப்பகவுண்டர் புதூர் காலனியில் உள்ள 12 வீடுகள் மழையால் இடிந்துவிழந்தன. புன்செய் புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையத்தில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.மழையால் பாதிக்கப்பட்ட பெரியகுளம், நஞ்சப்பகவுண்டர் புதூர் ஆகிய இடங்களை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்,மாவட்ட ஆட்சியர் பிரபாரகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரொக்கம் ரூ.5 ஆயிரம்,அரிசி மற்றும் வேஷ்ட-சேலைகளை அமைச்சர் வழங்கி பேசுகையில் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள குடும்பங்களுக்கு பசுமைவீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் கோணமூலை ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மினிசண்முகம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி,வி.சி.வரதராஜ், ஊராட்சி செயலாளர் எஸ்.மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment