தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 14, 2014

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா துவங்கியது
*******************************************************


சத்தியமங்கலம் அக்டோபர் 15 :

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா நேற்று அத்தாணி ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் துவங்கியது

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை தலைவர் வி.வைத்தீஸ்வரன் புத்தக அரங்கினை திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை பண்ணாரி அம்மன் பள்ளிகளின் செயலாளர் எ.என்.குழந்தைசாமி வழங்க ஆடிட்டர் மயில்சாமி பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளையின் துணை தலைவர்கள் ஏ.கே.பெருமாள்சாமி, எஸ்.பி.குமாரசாமி, ஆர்.பெருமாள்சாமி, சாரு மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் ஏ. சாமியப்பன், இ.என்.செந்தில்குமார், விடியல் தலைவர் தருமராசு, சக்திவேல், நுகர்வோர் & சாலை பாதுகாப்பு செயலாளர் சி.பரமேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருப்பதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் அத்தாணி ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்க உள்ளது. புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்கபடுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். அக்டோபர்16 ஆம் தேதி பேராசிரியை புனிதா ஏகாம்பரம் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி பேசுகிறார். அக்டோபர் 18 ஆம் தேதி இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.சென்னியப்பன் பேசுகிறார். அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவு விழாவில் சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் பேசுகிறார்.

சத்தியமங்கலம் புத்தக திருவிழாவின் ஐந்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும், பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment