புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா துவங்கியது
******************************************************
******************************************************
புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 8 :
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கத்தின் சார்பில் மூன்றாம்
ஆண்டு புத்தக திருவிழாவின் துவக்க விழா நேற்று நகராட்சி திருமண
மண்டபத்தில் நடைபெற்றது.
விடியல் சமுகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.என் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் விஜயராணி முன்னிலை வகித்தார்.
பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் புத்தக கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு முதல் புத்தக விற்பனையை பெற்று கொண்டார்.
துவக்க விழாவில் ஞானதண்டபாணி, கிளை நூலகர் பழனிசாமி, பசுமை பேராயம் அறக்கட்டளை சுந்தரம், நந்தகுமார் அரிமா சையத் ரியாவுதீன் விடியல் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல், கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள். விடியல் தலைவர் கே.தருமராசு நன்றி கூறினார்.
விடியல் சமுகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.என் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் விஜயராணி முன்னிலை வகித்தார்.
பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் புத்தக கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு முதல் புத்தக விற்பனையை பெற்று கொண்டார்.
துவக்க விழாவில் ஞானதண்டபாணி, கிளை நூலகர் பழனிசாமி, பசுமை பேராயம் அறக்கட்டளை சுந்தரம், நந்தகுமார் அரிமா சையத் ரியாவுதீன் விடியல் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல், கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள். விடியல் தலைவர் கே.தருமராசு நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment