தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, October 16, 2014

நக்சல் ஊடுருவலை தவிர்க்க இரு மாநில வன எல்லையில் போலீசார் கண்காணிப்பு. - முன்னாள் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் பேட்டி

 

சத்தியமங்கலம், அக்.17. தமிழகத்தில் நக்சல் நடமாட்டம் இல்லையென்றாலும்
அண்டை மாநிலங்களில் உள்ள நக்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில்
அதிரடிப்படையினர் தமிழகம் கர்நாடகம் மற்றும் கேரள மாநில வன எல்லைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே நக்சல் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ய  முன்னாள் அதிரடிப்படை தலைவரும், மத்திய உள்துறை முத்த பாதுகாப்பு ஆலோசகருமான விஜயகுமார் நேற்று சத்தியமங்கலம் வந்தார்.

இவர் இருமாநில எல்லையில் உள்ள வனகிராமங்களான கெத்தேசால், கேர்மாளம், திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த கிராம மக்களை சந்தித்து புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. தமிழக வனப்பகுதியில் தேனி, ஒகேனேக்கல், ஜவ்வாது மலை, தமிழக ஆந்திர எல்லைகளில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் பழைய அநியாயங்களை மீண்டும் மீண்டும் கூறி அவர்களின் மனநிலையை மாற்றியதால் மேற்கண்ட இடங்களில் நக்சல் அமைப்புகள் தலைதூக்கியது. போலீசாரின் தொடர் நடவடிக்கையில் நக்சல் அமைப்பு ஒடுக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் நடமாட்டம் குறித்து போலீசார் நுண்பிரிவு போலீசார் தகவல் சேகரித்து தமிழகத்தில் நக்சல் ஊடுவலை முற்றிலுமாக தடுத்துள்ளனர். கேரளா மற்றும் ஆந்திர வனப்பகுதிகளில் நக்சல் பாதிப்பு இருப்பதால் அவை தமிழகத்தில் நுழையாவண்ணம் 3 மாநில போலீசார் கூட்டாக தகவல் சேகரித்து நக்சல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கெத்தேசால் கிராமத்தில் வசித்த 7 பேரை வீரப்பன் வெட்டிக்கொன்றான்.

இச்சம்பவம் 1994 ம் ஆண்டு நடந்தது. அன்று முதல் கிராம மக்களின்
குலதெய்வமாக கருதப்பட்ட ஜடையருத்ரசாமி கோயிலை முடினர். 10 ஆண்டுகளுக்கு பின்பு 2004 ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு மீண்டும் கோயிலை கிராம மக்கள் திறந்தனர். பொதுவாக நக்சல்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை ஜனநாயக ரீதியாக அரசிடம் முன்வைத்தால் உள்துறை அமைச்சகம் பரிசீலிக்கும். ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் நக்சல் குடும்பத்திற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து  அதிநவீன தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

படம் புட்நோட்
நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ய  முன்னாள்
அதிரடிப்படை தலைவரும், மத்திய உள்துறை முத்த பாதுகாப்பு ஆலோசகருமான
விஜயகுமார் நேற்று சத்தியமங்கலம் வந்தார்.





0 comments:

Post a Comment