சத்தியமங்கலம் வனத்தில் கனமழை:வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
சத்தியமங்கலம் வனப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலம், புளியம்கோம்பை வனப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து, வன அருவிகளில் இருந்து வரும் தண்ணீர் அங்குள்ள பள்ளத்தில்
கலப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வன அருவிகள், பள்ளங்களில் இருந்து
வரும் வெள்ளம் சூரிப்பள்ளம் என்ற இடத்தில் சனிக்கிழமை கலந்ததால் அங்கு
திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், சத்தி - கொமாரபாளையம் தரைப்
பாலம் வெள்ள நீரில் மூழ்கியது.
பள்ளத்தில் முள்செடிகள் மற்றும் மரக்கிளைகள் அடித்துச் செல்லப்பட்டதால்
சத்தி - கொடிவேரி அணை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால்,
பள்ளிநேரம் முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் வெள்ளம் வடியும் வரை
காத்திருந்தனர்.
சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் மழைநீர் வடிந்ததால் அப்பகுதி சேறும்
சகதியுமாக காணப்பட்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக மேலும் 1 மணி
நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment