கொடிவேரி அணையில் குளிக்கத் தடை
கோபி, அக். 26: நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் பெய்யும் கனமழையால் கொடிவேரி
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 300 கனஅடியாக
இருந்த நீர் வந்தது, நேரம் செல்ல செல்ல 3,700 அடியாக அதிகரித்தது. பவானி ஆற்றின் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் அணை பகுதிக்கு
செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையளவு, நீர் வரத்து
குறைந்த பின் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் என்று பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.
மழையால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 16-ம் தேதி முதல் நீர்
நிறுத்தப்பட்டுள்ளது. குண்டேரிப்பள்ளம் அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்
பகுதியில் ஓரிரு வாரங்களாக மழை பொழிவதால், அணையில் 42 அடி நீர் உள்ளது.
0 comments:
Post a Comment