சத்தியமங்கலத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
சத்தியமங்கலம்,செப் 19:
சத்தியமங்கலம்
இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தில் 90 விநாயகர்
சிலைகள் கொண்டுவரப்பட்டு அங்குள்ள பவானிஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சத்தியமங்கலம் நகர்ப்பகுதி, கொத்துக்காடு, அரியப்பம்பாளையம்,இண்டியம்பாளை
யம்,
தாசம்பாளையம், பவானிசாகர், பகுத்தம்பாளையம்,உப்புப்பள்ளம், புன்செய்
புளியம்பட்டி, கணபதிபாளையம் மற்றும் சாணார்பதி ஆகிய இடங்களில் இந்துமுன்னணி
சார்பில் 90 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள்
நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சத்தியில் விநாயகர் சிலை ஊர்வலம் சனிக்கிழமை
நடைபெற்றது. எஸ்.ஆர்.டி கார்னரில் துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலத்தை
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் கொடியசைத்து துவக்கி
வைத்தார். இந்த ஊர்வலம் மைசூர் சாலை, ஆற்றுப்பாலம், கோட்டுவீராம்பாளையம்,
கடைவீதி, பெரியபள்ளிவாசல் வீதி, சத்யா தியேட்டர், திப்புசுல்தான் சாலை
வழியாக பவானிஆற்றை சென்றடைந்தது. அங்கு இந்து முன்னணியினர் விநாயாகர்
சிலைகளு்க்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆற்றில் கரைத்தனர். ஊர்வலத்தையொட்டி,
சத்தி டிஎஸ்பி மோகன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்தனர்
0 comments:
Post a Comment