கோவில் இடிப்பு விவகாரம்: சத்தியில் அமைதிக் கூட்டம்
சத்தியமங்கலம்,செப் 9:
உதயமரத்திட்டு அருகே கோவில்கள் இடிக்கப்பட்டதற்கு ஊர்பொதுமக்கள் எதிர்ப்பு
தெரிவித்ததையடுத்து சத்தி வருவாய் வட்டாட்சியர் வீ.வேணுகோபால் தலைமையில்
அமைதிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.இதில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள்
குருசாமி, சக்திவேல் மற்றும் உதயமரத்திட்டு ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சத்தி சார்பு நீதிமன்றத்துக்கு சொந்தமான இடம் என்பதால் கோவில்கள்
அகற்றப்பட்டதாகவும் கோவில்கள் கட்டுவதற்கு வேறொரு இடம் அரசு சார்பில்
ஒதுக்குவதாகவும் அதற்கான செலவுகளை நன்கொடையாளர்களை கொண்டு செய்து தருவது
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0 comments:
Post a Comment