திம்பம்-ஆசனூர் சாலையில் யானைகள் உலா
சத்தியமங்கலம்,செப் 21:
திம்பம்-ஆசனூர் சாலையில் குட்டியுடன் யானைகள் உலாவுவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
சத்தியமங்கலம்
புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. திம்பம்
முதல் தாளவாடி எல்லை வரை 25 கிமீ தூரம் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த
வழித்தடத்தில் தமிழகம் கர்நாடக வாகனங்கள் 24 மணி நேரமும் பயணிக்கின்றன.
இங்குள்ள யானைகள் தீவனம் மற்றும் குடிநீர் தேவைக்காக இடம் பெயரும் போது
குறுக்கே செல்லும் சாலையை கடந்து செல்கின்றன. ஓரிரு யானைகள் சாலையோரம்
நின்றுகொண்டிருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில்,
தாளவாடியைச் சேர்ந்த கேஜிஆர் பிரகாஷ், சம்பத் ஆகியோர் காரில் திங்கள்கிழமை
சத்தி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆசனூர் சாலையில் குட்டியுடன்
நின்றுகொண்டிருந்த யானையை பார்த்து காரை நிறுத்தினர். அந்த யானை சாலையை
விட்டு நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. யானை சாலையோரமாக
நிற்கும்நேரத்தை பயன்படுத்தி பிரகாஷ் காரை வேகமாக ஓட்டியபோது யானை அவர்களை
துரத்தியது. இதனால் பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் நீண்ட நேரமாக
காத்திருந்தன. யானைகள் அடிக்கடி சாலையில் நிற்பதால் வாகனப்போக்குவரத்து
பாதிப்பு ஏற்படுவதால் வனத்துறை சார்பில் அதிவிரைவு படை ஏற்படுத்தி
வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment