சத்தி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
சத்தியமங்கலம்,செப் 19:
சத்தியமங்கலம்
அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற முதல் புரட்டாசி
சனிக்கிழமை வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புரட்டாசி
மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் பக்தர்கள்
விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி,
சனிக்கிழமை அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள்
நடத்தப்பட்டன. ரங்கநாதருக்கு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து
அலங்காரபூஜையும் நடைபெற்றது. நின்ற, அமர்ந்த மற்றும் படுத்த என மூன்று
நிலைகளில் உள்ள மூவருக்கு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
பாமா
ரூக்குமணியுடன் மூலவர் புல்லாங்குழல் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
லட்சுமி நாராயணசுவாமிக்கு மலர் மற்றும் துளசியால் புஷ்ப அலங்காரம்
செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி,
பூதேவியுடன் ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். பக்தர்கள் துளசி மற்றும் பூமாலைகளை கொண்டுவந்து
சுவாமிக்கு படைத்து பெருமாளை தரிசித்தனர்.
சத்தி கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.
0 comments:
Post a Comment