தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 7, 2015

சத்தியில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

சத்தியமங்கலம், ஆக 5:
கோகுலாஷ்டமியை முன்னிட்டு சத்தி வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் சனிக்கிழமை நடந்த சிறப்புபூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
சத்தியமங்கலம் ஶ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் சனிக்கிழமை காலை சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. இதையொட்டி  மலர் அலங்காரத்தில்  ரங்கநாத பெருமாள், ஶ்ரீ லட்சுமிநாரயணசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவில் மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீமத் கீதா ஹோமத்தில் 50 பெண் பக்தர்கள் கலந்துகொண்டு 700 பகவத கீதை பஜனைகளுடன் காயத்திர மந்திரங்கள் பாடினர்.  நண்பகல் 1 மணிக்கு அபிஷேகமும்  மாலை 7 மணிக்கு சுவாமி புற்பாடும் அதனைத் தொடர்ந்து உறியடி விழாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஆனந்தஐயர் தலைமையில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment