தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 25, 2015

புன்செய் புளியம்பட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா 


புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 25: தமிழக ஆசிரியர் கூட்டணி பவானிசாகர் கிளையின் ஐம்பெரும்விழா புன்செய் புளியம்பட்டி ராஜ்மகாலில் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு வட்டார தலைவர் ஜான் பாஸ்கோ தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் இரா.முத்து வரவேற்றார். வட்டார மகளிர் அணி செயலாளர் கிறிஸ்டி இயக்க உறுதிமொழியை வாசித்தார். வட்டார துணை தலைவர் ராஜ்குமார் அறிக்கை வாசித்தார். வட்டார பொருளாளர் அருள்முருகன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். 

இந்நிகழ்ச்சியில் ஐபெட்டொவின் அகில இந்திய செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள வா.அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க பட்டது. அதே போல் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் புஷ்பவதி, வேலுமணி, முத்துராஜ், ராமசாமி, குமாரசாமி, காளியண்ணன், நாகரத்தினம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்க பட்டது. அதேபோல் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நேருநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி ஆசிரியர் ஜான் பாஸ்கோ அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி பவானிசாகர் கிளையின் சார்பில் நடைபெற்ற பல்வேறு சமுக பணிகள் குறித்தும், வரும் ஆண்டுகளில் செய்யவேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்க பட்டது. பாராட்டு பெற்ற அனைத்து ஆசிரியர்களும் ஏற்புரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாநில பொறுப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், கோ.முருகேசன், நம்பிராஜ், ராமதாசு, எழிலரசன், முனியாண்டி, செந்தில்குமார், துரை பாலகிருஷ்ணன், ராஜசேகரன், மார்க்கரேட் சில்வியா , ஜெரோம், சரவணன், வேலுசாமி, பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவில் வட்டார துணை தலைவர் ரமாதேவி நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment