தலமலை சாலையில் பட்டப்பகலில் நடமாடும் யானைகள்
சத்தியமங்கலம்,
செப்.1. திம்பம் & தலமலை சாலையில் நேற்று மாலை பட்டப்பகலில் யானைகள்
சர்வசாதாரணமாக சுற்றித்திரிந்தன. திம்பம் & தலமலை சாலை 22 கிலோமீட்டர்
தூரம் உள்ள அடர்வனப்பகுதியில் அமைந்துள்ள வனச்சாலையாகும். இவ்வனப்பகுதியில்
யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன.
இவ்விலங்குகள் இச்சாலையை பகல்நேரங்களில் கடப்பதும், சாலையோரம் நின்றுகொண்டு
பொழுதைக்கழிப்பதுமாக இருப்பது இயல்பு. குறிப்பாக யானைகள் சாலையில் வந்து
நின்றுகொண்டு பலமணி நேரம் வனப்பகுதிக்குள் செல்லாமல் யானக்குட்டிகளுடன்
சாலைகளில் வி¬ளாயாடி மகிழ்கின்றன. நேற்று மாலை 4 மணியளவில் ராமரணை
பஸ்நிறுத்தம் அருகே 5 க்கும் மேற்பட்ட யானைகள் சாலையில்
நின்றுகொண்டிருந்தன. பொதுமக்கள் இச்சாலையில் செல்ல அனுமதி இல்லாததால்
போக்குவரத்து குறைவாக உள்ள இச்சாலை எப்போதும் வெறிச்சோடி கிடக்கும்.
வனகிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் 2 அரசுப்பேருந்துகள், உரு தனியார்
பேருந்து மட்டுமே இச்சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் யானைகள்
மணிக்கணக்கில் சாலையின் நின்றுகொண்டிருந்தன. பின்னர் சாலையில் சில
வாகனங்கள் வந்ததால் யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
0 comments:
Post a Comment