எறிபந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் - அம்மா மெட்ரிக் பள்ளி தொடர் சாதனை
புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 1: ஈரோடு மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு
இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு
உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் அம்மா மெட்ரிக்
பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மாநில
அளவிலான போட்டிக்கு அம்மா மெட்ரிக் பள்ளி தகுதி பெற்றுள்ளது.
எறிபந்து போட்டியில் அம்மா மெட்ரிக் பள்ளி கடந்த ஆண்டுகளில் முதலிடம்
பெற்றுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து முதலிடம் பெற்று அம்மா மெட்ரிக் பள்ளி
சாதனை படைத்துள்ளது. அம்மா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திரு அன்பு,
முதல்வர் ராணி லக்ஷ்மி அன்பு, உடல்கல்வி ஆசிரியர் வரதராஜ் மற்றும் வெற்றி
பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் வெற்றிபயணம்.
0 comments:
Post a Comment