தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, September 10, 2015

சத்தி அருகே மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயி


சத்தியமங்கலம்,செப் 9:
சத்தி அருகே மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயியை சத்தி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள செண்பகபுதூர் சின்னப்புதூரைச் சேர்ந்தவர் த.பொன்னுச்சாமி(65).இவரது மனைவி அய்யம்மாள்(60). இவர்கள் அங்குள்ள தோட்டத்தில் வசித்து வந்தனர்.இந்நிலையில் புதன்கிழமை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கணவர்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி வண்டிக்கட்டையால் அய்யம்மாளை தாக்கியதில் அவள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்துவிட்டதை அறிந்த பொன்னுச்சாமி, போலீஸூக்கு பயந்து கத்தியால் உடலை காயம் ஏற்படுத்திக் கொண்டார். தகலறிந்து அங்கு வந்த சத்தி போலீஸார் பொன்னுச்சாமியை கைது செய்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

0 comments:

Post a Comment