புன்செய் புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா
புன்செய்
புளியம்பட்டி செப்டம்பர் 16: புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் விநாயகர் ஆலயங்கள் மற்றும் 75இக்கும் மேற்பட்ட இடங்களில்
விநாயகர் சிலைகள் ப்ரிதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
புன்செய் புளியம்பட்டியில் சுமார் 3 அடி முதல் 15 அடி வரை விநாயகர்
சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிர்புறம் 11
அடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அனைத்து வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு
வழிபாடுகள் நடைபெறுகின்றன.
புன்செய் புளியம்பட்டி முழுவதும் 75 இக்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள், சிறுவர்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பிரச்னைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புன்செய் புளியம்பட்டியில் உள்ள விநாயகர் சிலைகள் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானிசாகர் நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புன்செய் புளியம்பட்டி முழுவதும் 75 இக்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள், சிறுவர்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பிரச்னைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புன்செய் புளியம்பட்டியில் உள்ள விநாயகர் சிலைகள் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானிசாகர் நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment