ஆசனூர் மலைச்சரிவில் தவறிவிழுந்து குட்டியானை பலி
சத்தியமங்கலம்,செப் 18:
தாளவாடி அருகே மலைச்சரிவில் குட்டியானை தவறிவிழுந்து பலியானது.
தாளவாடி அருகே மலைச்சரிவில் குட்டியானை தவறிவிழுந்து பலியானது.
சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள
யானைக்கூட்டத்தில் குட்டிகள் இருப்பதால் அவை குட்டிகளை பாதுகாப்பாக
அழைத்துச் செல்லும். இதற்கிடையில், பனகனஹள்ளி என்ற வனச்சரிவில் யானைகள்
குட்டிகளுடன் இறங்கும்போது ஒரு வயதுள்ள ஆண் குட்டியானை தவறி சரிவில்
விழுந்தது. அது கிடு கிடு பள்ளத்தில் உருண்டுபடி பாறை மீது மோதியதில்
பலத்த காயம்ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து அங்கு வந்த ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர் பழனிச்சாமி மற்றும் திம்பம் கால்நடை மருத்துவர் நல்லசாமி ஆகியோர் யானையின் உடலை கைபற்றி ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனை பிறகு யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர் பழனிச்சாமி மற்றும் திம்பம் கால்நடை மருத்துவர் நல்லசாமி ஆகியோர் யானையின் உடலை கைபற்றி ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனை பிறகு யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment